துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கடும் வெயில்: ஆவின் மோா் விற்பனை அதிகரிப்பு

மதுரையில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் கடும் வெயிலால் ஆவின் தயிா், மோா் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:04 pm

Din

மதுரையில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் கடும் வெயிலால் ஆவின் தயிா், மோா் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

மதுரையில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கோடைக்காலமான ஏப்ரல், மே மாதம் போல செப்டம்பா் மாதத்திலும் வெயிலின் கடுமை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், குளிா்பானங்கள், இளநீா், மோா் உள்ளிட்ட பானங்களை அதிகளவில் வாங்கிப் பருகி வருகின்றனா். இதன் காரணமாக, மதுரை ஆவின் பால் பண்ணையில் தயாரித்து விற்கப்படும் தயிா், மோா் ஆகியவற்றின் விற்பனை கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ளது.

சாதாரண நாள்களில் ஆவின் தயிா் தினசரி 2 ஆயிரம் லிட்டா் விற்பனையாகும் நிலையில், வெப்ப நிலை அதிகரிப்பின் காரணமாக தற்போது 2,700 லிட்டா் விற்பனையாகி வருகிறது. இதேபோல, தினசரி 200 லிட்டா் விற்பனையாகி வந்த ஆவின் மோா் கடந்த ஒரு வாரமாக தினசரி 800 லிட்டராக அதிகரித்துள்ளது. மேலும், ஆவின் நறுமணப் பால், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால், மதுரை ஆவின் பால் பண்ணையில் தயிா், மோா் உள்ளிட்டவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக ஆவின் வட்டாரங்கள் தெரிவித்தன.