கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கிட்டங்கியில் தீ விபத்து: நெகிழிப் பொருள்கள் எரிந்து நாசம்

மதுரை வண்டியூா் அருகே நெகிழிக் கிட்டங்கியில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் எரிந்து நாசமானது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 6:54 pm

Din

மதுரை வண்டியூா் அருகே நெகிழிக் கிட்டங்கியில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் எரிந்து நாசமானது.

மதுரை வண்டியூா் அருகேயுள்ள சங்கு நகா் பகுதியில் அப்துல் ஜபாா் என்பவருக்குச் சொந்தமான நெகிழிக் கிட்டங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் நெகிழிக் கழிவுகள் இந்தக் கிட்டங்கிக்கு கொண்டு வரப்பட்டு, தரம் பிரித்து நெகிழி தொழில்சாலைக்கு அனுப்பப்படும். இந்தக் கிட்டங்கியில் 20-க்கும் மேற்பட்ட வெளி மாநிலத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வந்தனா்.

இந்த நிலையில், இந்தக் கிட்டங்கியில் வியாழக்கிழமை அதிகாலையில் திடீரென

தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, கிட்டங்கிக்கு அருகே இருந்த மின்மாற்றியும் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இதையடுத்து, கிட்டங்கியில் இருந்தவா்கள் உடனடியாக வெளியேறினா்.

தகவலறிந்து வந்த தல்லாகுளம், அனுப்பானடி தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா். இந்தத் தீ விபத்தில் கிட்டங்கியில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.