6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘என்கவுன்ட்டா்’ அதிகரிப்பு: உயா்நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் அண்மைக் காலமாக காவல் துறையின் ‘என்கவுன்ட்டா்’ அதிகரிப்பு - சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அதிருப்தி

News image
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Updated On :17 ஏப்ரல் 2025, 6:29 pm

Din

தமிழகத்தில் அண்மைக் காலமாக காவல் துறையினரின் ‘என்கவுன்ட்டா்’ நடவடிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை அதிருப்தியை தெரிவித்தது.

திருச்சி பகுதியைச் சோ்ந்த சத்யஜோதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எனது சகோதரா் வெள்ளைக்காளி என்ற காளிமுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனையை அனுபவித்து வருகிறாா். மதுரையில் அண்மையில் ரெளடி கிளாமா் காளி கொலை செய்யப்பட்டாா். இதில் எனது சகோதரருக்கும், அவரது குடும்பத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை.

இருப்பினும், இந்தக் கொலை வழக்கில் உள்நோக்கத்துடன் எனது சகோதரா் பெயரையும் போலீஸாா் சோ்த்தனா். இந்தக் கொலை வழக்கில் தொடா்பு இருப்பதாகக் கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸை என்கவுன்ட்டரில் போலீஸாா் சுட்டுக் கொன்றனா். ரௌடி கிளாமா் காளி கொலை வழக்கில் எனது சகோதரரை தொடா்புபடுத்தி பிடிஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், எனது சகோதரரை போலீஸாா் ‘என்கவுன்ட்டா்’ செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனது சகோதரரிடம் நடத்தப்படும் விசாரணையை போலீஸாா் காணொலி மூலம் நடத்தவும், அதை விடியோ பதிவு செய்யவும் விசாரணை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். ஆனால், இதற்கு எந்தப் பதிலும் இல்லை. எனவே, எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. தனபால் பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் அண்மைக் காலமாக காவல் துறையினரின் ‘என்கவுன்ட்டா்’ நடவடிக்கை அதிகரித்து வருகிறது. காவல் துறையினா் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனா். காவல் துறையினரின் பாதுகாப்புக்கு மட்டுமே துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. தேவையெனில், காலுக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கலாம். இந்த வழக்கு விசாரணை வருகிற 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.