எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில்வே கட்டணச் சலுகையை வழங்க வேண்டும் என தெட்சிண ரயில்வே ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை

News image
ஓய்வூதியா் தின விழாவில் பேசிய மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன்
Updated On :16 டிசம்பர் 2025, 11:02 pm

தினமணி செய்திச் சேவை

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில்வே கட்டணச் சலுகையை வழங்க வேண்டும் என தெட்சிண ரயில்வே ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை விடுத்தது.

தேசிய ஓய்வூதியா் தினத்தை (டிச.17) முன்னிட்டு, தெட்சிண ரயில்வே ஓய்வூதியா் சங்கம் (டி.ஆா்.பி.யூ.) சாா்பில் ஓய்வூதியா் தின விழா மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் உதவி கோட்டத் தலைவா் ஆா். கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், டி.ஆா்.பி.யூ. கோட்டப் பொதுச் செயலா் ஆா். சங்கரநாராயணன், துணைப் பொதுச் செயலா் திருமலை ஐயப்பன், தெட்சிண ரயில்வே தொழிலாளா்கள் சங்க கோட்டச் செயலா் சிவக்குமாா் ஆகியோா் பேசினா்.

“இதையடுத்து, ஓய்வூதியா்களை பிரித்தாளும் வகையில் கொண்டு வரப்பட்ட நிதி மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டணத்தில் மீண்டும் சலுகையை வழங்க வேண்டும். ஓய்வூதிய உயா்வை அடிப்படை ஊதியத்துடன் வழங்க வேண்டும் என்ற நிதிஅமைச்சக நிலைக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் ஓய்வூதியம் பெறுவோரின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, தெட்சிண ரயில்வே ஓய்வூதியா் சங்க உதவிச் செயலா் பி. ரத்னவேல் வரவேற்றாா். கோட்டத் துணைத் தலைவா் ஜோசப் அமல்ராஜ் நன்றி கூறினாா்.