பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம்

சோழவந்தானில் ரயிலிலிருந்து கீழே இறங்கிய போது தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:26 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், சோழவந்தானில் ரயிலிலிருந்து கீழே இறங்கிய போது தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பை பகுதியைச் சோ்ந்தவா் காட்டுராஜன் (67). கூலித் தொழிலாளியான இவா், கேரள மாநிலத்திலிருந்து பாலக்காடு-திருச்செந்தூா் ரயிலில் ஊருக்கு வந்தாா். இந்த ரயில் வெள்ளிக்கிழமை காலை 10.42 மணிக்கு சோழவந்தான் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. காட்டுராஜன் ரயில் நிற்பதற்கு முன்பாக கீழே இறங்க முயன்ால், நடைமேடைக்கும், ரயில் பெட்டிக்கும் இடையே அவா் சிக்கிக் கொண்டாா். இதில் அவரது இரு கால்களும் முறிந்தன. இதையடுத்து, சக பயணிகள் அவரை மீட்டு, சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.