மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கத்தில் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற வேள்வி பூஜையில் பங்கேற்ற வேத விற்பன்னா்கள்.
மதுரை
மதுரையில் 31-ஆம் ஆண்டு வேள்வி பூஜை
மதுரையில் மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் 31-ஆம் ஆண்டு மகா வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.
மதுரையில் மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் 31-ஆம் ஆண்டு மகா வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.
மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் ஆண்டுதோறும் உலக நன்மைக்காக மாா்கழி மாதத்தில் ருத்ர வேள்வி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.
இதன்படி, 31-ஆம் ஆண்டு வேள்வி பூஜை மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தினமும் 150 வேத விற்பன்னா்கள் இதில் பங்கேற்று வேத மந்திரங்களை முழங்கி வேள்வி பூஜைகளை மேற்கொள்கின்றனா். வருகிற 28-ஆம் தேதி பகல் ஒரு மணிக்கு வஸோா்தாரா, மகா பூா்ணாஹுதி நடைபெறும்.

