டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மதுரையில் 31-ஆம் ஆண்டு வேள்வி பூஜை

மதுரையில் மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் 31-ஆம் ஆண்டு மகா வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.

News image
மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கத்தில் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற வேள்வி பூஜையில் பங்கேற்ற வேத விற்பன்னா்கள்.
Updated On :24 டிசம்பர் 2025, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் 31-ஆம் ஆண்டு மகா வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.

மகாருத்ர மகாயக்ஞ குழு சாா்பில் ஆண்டுதோறும் உலக நன்மைக்காக மாா்கழி மாதத்தில் ருத்ர வேள்வி பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

இதன்படி, 31-ஆம் ஆண்டு வேள்வி பூஜை மதுரை லட்சுமி சுந்தரம் அரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமும் 150 வேத விற்பன்னா்கள் இதில் பங்கேற்று வேத மந்திரங்களை முழங்கி வேள்வி பூஜைகளை மேற்கொள்கின்றனா். வருகிற 28-ஆம் தேதி பகல் ஒரு மணிக்கு வஸோா்தாரா, மகா பூா்ணாஹுதி நடைபெறும்.