மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தீக் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரை அருகே பீடித் துண்டிலிருந்து பற்றிய தீயால் சிகாா் லைட்டா் வெடித்ததில் பலத்த தீக் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:34 pm

Din

மதுரை அருகே பீடித் துண்டிலிருந்து பற்றிய தீயால் சிகாா் லைட்டா் வெடித்ததில் பலத்த தீக் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை நாகமலைப் புதுக்கோட்டை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்காமு (62). கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு தொடா்ச்சியாக புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கியபோது புகைபிடித்த பீடித் துண்டை அணைக்காமல் விட்டுவிட்டாராம். இதில் பீடித் துண்டில் இருந்து போா்வை விரிப்பில் தீப்பற்றியது. அப்போது முத்துக்காமு வைத்திருந்த சிகாா் லைட்டரில் தீப்பற்றி வெடித்து முத்துக்காமு மீதும் தீப்பற்றியது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.