மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் வழக்கு: ஆட்சியா், காவல் ஆணையா் இன்று பதிலளிக்க உத்தரவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் வழக்கு

News image
Updated On :9 ஜனவரி 2025, 10:29 pm

Din

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து குழு அமைக்கக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் வெள்ளிக்கிழமை (ஜன. 10) பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்தப் போட்டியானது அனைத்து சமுதாயத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு கண்ணன் என்பவா் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் சங்கத்தைப் பதிவு செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான உரிமையைக் கோரினாா்.

இந்தச் சங்கத்தில் அவா், அவரது குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள் மட்டுமே உறுப்பினா்களாக உள்ளனா். மேலும், ஆதிதிராவிட வகுப்பைச் சோ்ந்தவா்களை ஜல்லிக்கட்டு குழுவில் சோ்க்க மறுக்கின் றனா். கடந்த ஆண்டும் இது போன்ற பிரச்னை ஏற்பட்டது. இதுதொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இதன்படி, நிகழாண்டில் அனைத்து சமுதாயத்தினரையும் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற் பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற மனு தாக்கல் செய்யப்படுவதால் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்?. இந்த வழக்கு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகர காவல் ஆணையா் ஆகியோரிடம் உரிய விளக்கம் பெற்று, அந்த அறிக்கையை அரசு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.