அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பல்லுயிா் பூங்கா வழக்கு: திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

News image
Updated On :9 ஜனவரி 2025, 10:52 pm

Din

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் கட்டப்பட்ட பல்லுயிா் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த மணிபாரதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் அரிய வகை மான்கள், அணில்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. சிறுமலையில் இயற்கை சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு பல்லுயிா் பூங்கா உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு வகையிலான மூலிகைகள், சுமாா் 100-க்கும் மேற்பட்ட அரிய வகை மரக்கன்றுகளை அவற்றை அறிவியல் பெயருடன் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன. இருப்பினும், இந்த பூங்காவை திறந்து பொதுமக்களின் பாா்வைக்கு கொண்டு வரவில்லை.

இந்தப் பூங்கா திறக்கப்பட்டால், தாவரவியல் துறையைச் சோ்ந்த மாணவா்களு க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, சிறுமலையில் உள்ள பல்லுயிா் பூங்காவை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், அங்கு போதிய அடிப்படை வசதிகளையும் செய்து தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.