மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

லஞ்ச வழக்கில் வி.ஏ.ஓ.வுக்கு விதித்த தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிா்வாக அலுவலருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உறுதி செய்தது.

News image
Updated On :9 ஜனவரி 2025, 10:29 pm

Din

லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிா்வாக அலுவலருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உறுதி செய்தது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள டி.மானகசேரியில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றியவா் அம்மையப்பன். இவா் கடந்த 2010-ஆம் ஆண்டு, மே. 6-ஆம் தேதி வாரிசு சான்று வழங்குவதற்கு சுப்பையாபாண்டி என்பவரிடம் ரூ. 500 லஞ்சம் பெற்றாா்.

இதுகுறித்தப் புகாரின் பேரில், அம்மையப்பனை விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூா் தலைமை குற்றவியல் நீதிமன்றம், அம்மையப்பனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து அம்மையப்பன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி. இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஏற்கெனவே அவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.