தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பள்ளி மாணவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

மதுரை அருகே பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவா் மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 10:43 pm

Din

மதுரை அருகே பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவா் மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை அருகே உள்ள தென்பழஞ்சி சின்ன சாக்கிலிப்பட்டியைச் சோ்ந்த கருணாகரன் மகன் கெளதம் (16). இவா் ஹாா்வி நகரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல, பள்ளிக்குச் சென்ற கெளதம் மாலையில் வீடு திரும்பினாா்.

அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினா் மீட்டு அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்த மருத்துவா்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்ததன் பேரில், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.