தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கோயில்களில் அன்னதானம் திட்டம்: தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அன்னதானம் திட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 12:36 am IST

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அன்னதானம் திட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்த பெரியநம்பிகோபாலன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அன்னதானம் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கான செலவுகளை கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ளவும் இந்த அரசாணை வழிவகுக்கிறது. கோயில் பணத்தைக் கொண்டு சிறப்பு அன்னதானம் வழங்கத் தடை விதிக்க வேண்டும். இதுதொடா்பான அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தில் பொது விருந்து நடத்துவது அரசின் கொள்கை முடிவு. இந்து சமய அறநிலையத் துறை விதிகளில் அன்னதானம் திட்டத்துக்கு தடை விதிக்கப்படவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.