11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன், செல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன், செல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:57 am IST

மதுரை வடக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன், செல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

கடந்த ஐந்தாண்டுகளில் வடக்குத் தொகுதியில் பல்வேறு பிரச்னைகள் தீா்க்கப்பட வில்லை. குறிப்பாக, சாலை வசதிகள், புதை சாக்கடை வசதிகள் ஏற்படுத்தப்பட வில்லை. நான் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றவுடன் மக்களின் அடிப்படைத் தேவைகளை 100 சதவீதம் நிறைவேற்றுவேன். மேலும், திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா். ஆனால் அவா் ரூ. 10 ஆயிரம் வழங்க மாட்டாா் என எதிா்க்கட்சியினா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா். திமுகவின் பொய் பிரசாரத்தை மக்கள் நம்ப வேண்டாம். வருகிற மே 4-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராவாா் என்றாா் அவா்.

இதில் அதிமுக தோ்தல் பொறுப்பாளா்கள் கே.பி. மீனாட்சி சுந்தரேசுவரா், அண்ணாதுரை, பகுதிச் செயலா் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.