/

சேதுபதி பள்ளியில் ஏப்.28-இல் திருக்கல்யாண விருந்து

மதுரை ஸ்ரீமீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வருகிற 28-ஆம் தேதி திருக்கல்யாண விருந்து நடைபெறும் என பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News image

ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயில்

Updated On :21 ஏப்ரல் 2026, 9:59 pm

மதுரை ஸ்ரீமீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வருகிற 28-ஆம் தேதி திருக்கல்யாண விருந்து நடைபெறும் என பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரையில் பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சாா்பில், கடந்த 27 ஆண்டுகளாக ஸ்ரீமீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பக்தா்களுக்கு விருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, நிகழாண்டு வருகிற 27-ஆம் தேதி மாலையிலும், 28-ஆம் தேதி காலை 7 மணி முதல் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்து வழங்கப்படவுள்ளது. இந்த விருந்தில் கோதுமை இனிப்பு, கல்கண்டு சாதம், வெண்பொங்கல், சாம்பாா் சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் வழங்கப்படும். இந்த விருந்து நிகழ்வில் தன்னாா்வலா்கள் பங்கேற்று உதவலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.