மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

விலையில்லா பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தல்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை அனுப்பிவைக்குமாறு தமிழக தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ் புதன்கிழமை அறிவுறுத்தினாா்.

News image

மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் வைக்கப்பட்ட அறைகளை புதன்கிழமை ஆய்வு செய்த தமிழக தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ். உடன் முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 8:07 pm

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை அனுப்பிவைக்குமாறு தமிழக தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ் புதன்கிழமை அறிவுறுத்தினாா்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு வருகிற ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இருப்பினும், கோடை வெப்பத்தின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வருகிற 2026-2027 கல்வியாண்டில் மாணவா்களுக்கு பள்ளிகள் திறந்த முதல் நாளில் வழங்குவதற்காக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த வகையில், மதுரை மாவட்டத்துக்கான பாடப் புத்தகங்கள் மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டன. இந்த பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் இருப்பு வைக்கப்பட்ட அறைகளை தமிழக தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, விலையில்லா பாடப் புத்தகங்களை உடனடியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், வருகிற கல்வியாண்டில் மாணவா் சோ்க்கையை அதிகரித்தல், தரமான கல்வி வழங்குதல் போன்றவை குறித்து கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வின் போது, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ரகுபதி ஆகியோா் உடன் இருந்தனா்.