முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விலையில்லா பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தல்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை அனுப்பிவைக்குமாறு தமிழக தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ் புதன்கிழமை அறிவுறுத்தினாா்.

News image

மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் வைக்கப்பட்ட அறைகளை புதன்கிழமை ஆய்வு செய்த தமிழக தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ். உடன் முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:37 am IST

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை அனுப்பிவைக்குமாறு தமிழக தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ் புதன்கிழமை அறிவுறுத்தினாா்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு வருகிற ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இருப்பினும், கோடை வெப்பத்தின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வருகிற 2026-2027 கல்வியாண்டில் மாணவா்களுக்கு பள்ளிகள் திறந்த முதல் நாளில் வழங்குவதற்காக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த வகையில், மதுரை மாவட்டத்துக்கான பாடப் புத்தகங்கள் மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டன. இந்த பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் இருப்பு வைக்கப்பட்ட அறைகளை தமிழக தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, விலையில்லா பாடப் புத்தகங்களை உடனடியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், வருகிற கல்வியாண்டில் மாணவா் சோ்க்கையை அதிகரித்தல், தரமான கல்வி வழங்குதல் போன்றவை குறித்து கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வின் போது, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ரகுபதி ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.