கள் விற்பனைக்கான தடையை மறு ஆய்வு செய்யக் கோரிய மனு தொடா்பாக தமிழக உள்துறை முதன்மைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை ஒத்தக்கடையைச் சோ்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
‘கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசு மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், தென்னை, பனை மரங்களிலிருந்து கள் இறக்கவும், விற்பனை செய்யவும் அனுமதிக்கும் வகையில் உரிய கொள்கையை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், சக்திவேல் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தமிழக உள்துறை முதன்மைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். கள் விற்பனைக்கான தடையை நீக்கக் கோரி ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் இருக்கும் வழக்குகளுடன் இந்த மனுவையும் சோ்த்துப் பட்டியலிட வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநங்கைகள் மறுவாழ்வு குறித்த விவகாரம்: தமிழக அரசின் அறிக்கையில் திருப்தியில்லை : உயா்நீதிமன்றம்
கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடையை நீக்கக் கோரி மனு

விளம்பர நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ஏற்கத்தக்கதல்ல: உயா்நீதிமன்றம்

கா்ப்பிணி உயிரிழப்பு குறித்து சிறப்புக் குழு விசாரிக்கக் கோரி மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



