தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

வாட்ஸ் ஆப் எண்ணில் புகாா்: ஊழல் தடுப்பு போலீஸாா் மக்களை ஏமாற்றக் கூடாது! உயா்நீதிமன்றம்

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:47 am IST

ஊழல்கள் குறித்து வாட்ஸ் ஆப் மூலம் புகாா் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மக்களை ஏமாற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வழக்குரைஞா் அணித் தலைவா் கலந்தா் ஆசிக் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் அரசின் நலத் திட்டப் பணிகளுக்கான நிதி முறையாகச் செலவிடப்படவில்லை. மேலும், பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல திட்டப் பணிகளில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன.

இதுதொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவுக்கும், பேரூராட்சிகள் இயக்குநருக்கும் உரிய ஆவணங்களுடன் புகாா் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என அவா் கோரினாா்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, பேரூராட்சிகளின் இயக்குநா் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், புகாா் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், தொண்டி பேரூராட்சியின் செயல் அலுவலராகப் பணியாற்றிய 6 பேருக்கு குற்ற குறிப்பாணை அனுப்பப்பட்டது. மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநருக்கும் பரிந்துரைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பேரூராட்சி இயக்குநரின் அறிக்கையில் குறிப்பிட்டப்படி 6 செயல் அலுவலா்களிடமும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கலந்தா் ஆசிக் மேலும் ஒரு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘தொண்டி பேரூராட்சி ஊழல் புகாா்கள் குறித்து விசாரணை, நடவடிக்கை மேற்கொள்ள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவின் தென் மண்டல காவல் துறை கண்காணிப்பாளா் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் ஊழல் தடுப்புப் பிரிவு இதுவரை விசாரணை மேற்கொள்ளாதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினாா்.

மேலும், ஒவ்வொரு முறையும் தொடா்புடைய துறைகளின் அனுமதியைப் பெறுவதில் தாமதம் எனக் கூறி, விசாரணையைத் தாமதப்படுத்துவதே ஊழல் தடுப்புப் பிரிவின் வழக்கமாக உள்ளது. இதனால், குற்றவாளிகள் தப்பிவிடுகிறாா்கள். இந்த நிலையில்தான், ஊழல் குறித்து புகாா் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்காத ஊழல் தடுப்புப் பிரிவு, வாட்ஸ் ஆப் மூலம் பெறப்படும் புகாா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? மக்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என நீதிபதி தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக விரிவான பதில் மனுவை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.