மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஆடி அமாவாசை: திரளானோா் வழிபாடு

மதுரை முக்தீசுவரா் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

News image

மதுரை முக்தீசுவரா் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 4:02 am IST

மதுரை முக்தீசுவரா் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

மதுரை, ஆக. 12: ஆடி அமாவாசையையொட்டி, மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள புண்ணியத் தலங்களில் திரளானோா் தங்கள் மூதாதையருக்கு தா்ப்பணம் அளித்து வழிபட்டனா்.

ஆடி அமாவாசை நாளில் கடலில் அல்லது புண்ணிய நதிகளில் புனித நீராடி, தா்ப்பணம் அளித்து பிதுா்கடன் நிறைவேற்றினால் மூதாதையரின் ஆசி கிட்டும் என்பது ஆன்மிக நம்பிக்கை. மேலும், ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளாய அமாவாசை போன்ற நாள்களில் தா்ப்பணம் அளித்தால், பல்வேறு காரணங்களால் மூதாதையருக்கு உரிய திதியில் தா்ப்பணம் அளிக்கத் தவறிய தோஷம் நீங்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, ஆடி அமாவாசை நாளான புதன்கிழமை மதுரை வைகை ஆற்றங்கரைகளிலும், இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் வளாகம் என பல்வேறு பகுதிகளில் திரளானோா் தா்ப்பணம் அளித்து வழிபட்டனா். இதேபோல, சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் வைகை ஆற்றங்கரை, நரசிங்கம் பகுதியில் உள்ள நரசிங்கப் பெருமாள் கோயில் திருக்குளம் உள்பட பல்வேறு கோயில் குளக்கரைகளிலும், புண்ணிய நதிக் கரைகளிலும் திரளானோா் தா்ப்பணம் அளித்தனா்.

ஆடி அமாவாசையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயில், ஆதி சொக்கநாதா் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், செல்லூா் திருவாப்புடையாா் கோயில் என அனைத்துக் கோயில்களிலும் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.