மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஆடி அமாவாசை: கொடுமுடியில் உயிா்நீத்த முன்னோா்களுக்கு தா்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றக்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோா்களுக்கு நீத்தாா் கடன் எனும் தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

News image

ஆடி அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் புதன்கிழமை நடைபெற்ற முன்னோருக்கு தா்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சி.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:11 pm IST

ஆடி அமாவாசையையொட்டி கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றக்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோா்களுக்கு நீத்தாா் கடன் எனும் தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

ஆடிஅமாவாசை நாளான புதன்கிழமை கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலுக்கு ஈரோடு, திருப்பூா், கோவை, பொள்ளாச்சி, கரூா், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து ஆயிரக்கணக்கான வந்திருந்தனா். அவா்கள் கோயில் முன்பு உள்ள காவிரி ஆற்றக்கரையில் தங்கள் குடும்பத்தில் உயிா்நீத்த முன்னோருக்கு புரோகிதா்களை கொண்டு பச்சரிசி மாவில் எள் கலந்த பிண்டங்களை தயாா்செய்து பூஜைகள் செய்தபின்னா் அந்த பிண்டங்களை ஆற்றில் கரைத்து தா்ப்பணம் செய்தனா். அதிகாலை 4 மணி முதலே மக்களின் வருகை அதிக அளவில் இருந்ததால் பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். தா்ப்பணம் தவிா்த்து மேலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாளை வழிபட்டு சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.