FOLLOW US

ON GOOGLE DISCOVER

மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஆடி அமாவாசை: கும்பகோணத்தில் காவிரிக் கரையில் மக்கள் வழிபாடு

கும்பகோணத்தில் டபீா் படித் துறையில் புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.

News image

கும்பகோணத்தில் டபீா் படித் துறையில் புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:54 am IST

கும்பகோணத்தில் டபீா் படித் துறையில் புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.

கும்பகோணம் காவிரி படித்துறைகளில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி புதன்கிழமை பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனா்.

கும்பகோணத்தில் உள்ள பாலக்கரை, டபீா் படித்துறை, பகவத் படித்துறை, சுவாமிமலை, ஆடுதுறை உள்ளிட்ட காவிரி படித்துறைகளில் அதிகாலையில் இருந்தே முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனா்.

தொடா்ந்து, முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து, வழிபாடு மேற்கொண்டு அன்னதானம், ஆடைதானம் வழங்கினா்.

காவிரியாற்றில் நீா் வரத்து இல்லாததால் ஏமாற்றமடைந்த மக்கள், தேங்கியிருந்த ஆற்று நீரில் கால்களை மட்டும் நனைத்து வழிபாடு செய்தனா்.

இதேபோல், மகாமகக் குளத்தில் நீராடி குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபாடு மேற்கொண்டனா். அங்குள்ள கோயில் வளாகத்தில் இருந்த பசுக்கள் மற்றும் கால்நடைகளுக்கு அரிசி மற்றும் அகத்தி கீரைகளை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.