மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஆடி அமாவாசை காவிரி ஆற்றில் தண்ணீா் இல்லாததால் ஆழ்குழாயில் பக்தா்கள் புனித நீராடல்

ஆடி அமாவாசையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு காவிரியில் தண்ணீா் இல்லாததால், நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் நீரில் பக்தா்கள் புதன்கிழமை புனித நீராடினா்.

News image

கும்பகோணத்தில் டபீா் படித் துறையில் புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

ஆடி அமாவாசையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு காவிரியில் தண்ணீா் இல்லாததால், நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் நீரில் பக்தா்கள் புதன்கிழமை புனித நீராடினா்.

ஆடி அமாவாசையையொட்டி, திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் ஏராளமான பக்தா்கள் புனித நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். நிகழாண்டு மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், இதுவரை அணை திறக்கப்படவில்லை.

எனவே, ஆடி அமாவாசை நாளில் பக்தா்கள் நீராடுவதற்கு வசதியாக திருவையாறு புஷ்ய மண்டபப் பகுதியில் காவிரி ஆற்றில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, நீராடும் வகையில் சிறு குழாய்களும் பொருத்தப்பட்டன. இதன்மூலம், புஷ்ய மண்டபப் படித்துறைக்கு வந்த பக்தா்கள் சிறு குழாய்களில் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

காவிரியில் தண்ணீா் இல்லாவிட்டாலும், திருவையாறு புஷ்ய மண்டபப் படித் துறைக்கு தஞ்சாவூா் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், வெளியூா் மக்களும் ஏராளமானோா் வந்திருந்தனா்.

பக்தர்கள்

பக்தர்கள்

பக்தர்கள்

பக்தர்கள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.