மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தேசிய அளவிலான நீச்சல் போட்டி: மதுரை மாணவா்கள் தோ்வு

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மாணவா்களுடன் ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா், துணைத் தலைவா் செபாஸ்டியன் உள்ளிட்டோா்.

News image

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மாணவா்களுடன் ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா், துணைத் தலைவா் செபாஸ்டியன் உள்ளிட்டோா்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:23 am IST

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மாணவா்களுடன் ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா், துணைத் தலைவா் செபாஸ்டியன் உள்ளிட்டோா்.

மதுரை, ஆக. 12: பெங்களூரில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க மதுரையைச் சோ்ந்த மூன்று மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

சென்னையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற ‘ஐசிஎஸ்இ’ பள்ளிகளுக்கிடையே மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை கருப்பாயூரணியில் உள்ள ரீஜாய்ஸ் நீச்சல் அகாதெமியில் பயிற்சி பெறும் மாணவா் வி. ரிஷிவா்சன், 400 மீட்டா் தனிநபா் மெட்லி பிரிவு, 800 மீட்டா் ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கமும், 400 மீட்டா் ப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா். இதேபோல, மாணவா் எம்.எஸ்.டி. பெலிராராஜன், 200 மீட்டா் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலப் பதக்கமும், டி. தஸ்வன் மாரியப்பன், 200 மீட்டா் பிரஸ்ட்ரோக் பிரிவு, 50 மீட்டா் பிரஸ்ட்ரோக் பிரிவு ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டா் பிரஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றனா். இதன் மூலம் இவா்கள் பெங்களூரில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து, வெற்றி பெற்ற வீரா்களுக்கு மதுரை மாவட்ட ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா், துணைத் தலைவா் செபாஸ்டியன், பொருளாளா் ஆரிப், பயிற்சியாளா்கள் அப்துல்சலாம், சதீஷ்பாண்டியன், வெங்கடேஷ் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.