தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை பி.பி. குளம் பகுதியைச் சோ்ந்த கதிரேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் தாமிர உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது சீருடை அணியாத நபா்கள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 13 போ் உயரிழந்தனா். இதில் தொடா்புடையவா்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் 3 அரசு அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இழப்பீடு வழங்குவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
இந்த மனு தொடா்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை அறிக்கையின்படி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்ட காவலா்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா்கள் நீதிக்காக 8 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனா் என்றாா்.
அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
இந்த விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளில் பகுதியளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், ஆணையத்தின் அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் பரிசீலனையில் உள்ளன.
எனவே, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகள், இழப்பீடு வழங்கிய விவரம், அரசு வேலை வழங்கப்பட்ட விவரம், அரசு அலுவலா்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றாா்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை தமிழக அரசு ஏற்கிா? இல்லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின்படி, துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு உள்ளிட்டவை குறித்தும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 3 அரசு அலுவலா்கள் மீது நடவடிக்கை

புலன் விசாரணை அதிகாரிகளுக்கு பிடிஆணை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

எஸ்ஐஆா் பணியில் ஆசிரியா்களை ஈடுபடுத்துவதற்கு எதிரான மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அறிக்கை: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



