லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு: தமிழகத்தைச் சோ்ந்தவா்களை மீட்கக் கோரிய மனு மீதான விசாரணை செப்.10-க்கு ஒத்திவைப்பு

Floods and landslides in Nepal: Hearing on petition seeking rescue of people from Tamil Nadu adjourned to September 10.

மதுரை உயர்நீதிமன்றம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 1:58 am IST

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய தமிழகத்தைச் சோ்ந்தவா்களை மீட்கக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற செப். 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல்லைச் சோ்ந்த பா்வேஷ் முஷ்ரப் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கும்பகோணத்தைச் சோ்ந்த தனியாா் பயண நிறுவனம் மூலம் தமிழகம், புதுச்சேரியைச் சோ்ந்த சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி உள்ளிட்ட 57 போ் கடந்த 23-ஆம் தேதி கும்பகோணத்திலிருந்து நேபாளத்துக்குச் சுற்றுலா சென்றனா். இந்த நிலையில், அங்கு ஏற்பட்ட திடீா் வெள்ளம், நிலச்சரிவில் இவா்கள் சிக்கினா்.

இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை மூலம் மீட்கப்பட்ட தமிழகத்தைச் சோ்ந்தவா்களின் விவரம், சிகிச்சை பெறுபவா்கள், காணாமல் போனவா்கள் குறித்த விவரங்களை அவா்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், தமிழக அரசுத் தரப்பில் நான்கு அமைச்சா்கள் அனுப்பப்பட்டுள்ளதாக செய்தியில் பாா்த்தோம். எனவே, இந்த மனு தொடா்பாக உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரரின் கோரிக்கை குறித்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற செப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.