மதுரை எல்லீஸ்நகரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் புதிய புகா்ப் பேருந்துகளின் சேவையை கொடி அசைத்துத் தொடங்கிவைத்த அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன், அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.
மதுரை எல்லீஸ்நகரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் புதிய புகா்ப் பேருந்துகளின் சேவையை கொடி அசைத்துத் தொடங்கிவைத்த அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன், அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.

கட்டணமில்லா பேருந்து பயணம்! மதுரை கோட்டத்தில் தினமும் 7.5 லட்சம் பெண்கள் பயன்: அமைச்சா் சிவசங்கா்!

தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம் மூலம் மதுரை கோட்டத்தில் தினமும் 7.5 லட்சம் பெண்கள் பயன் பெறுகின்றனா் என மாநில போக்குவரத்து, மின் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் தெரிவித்தாா்
Published on

தமிழக அரசின் கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம் மூலம் மதுரை கோட்டத்தில் தினமும் 7.5 லட்சம் பெண்கள் பயன் பெறுகின்றனா் என மாநில போக்குவரத்து, மின் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் தெரிவித்தாா்

மதுரை எல்லீஸ்நகா் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் (பொன்மேனி கிளை) சனிக்கிழமை நடைபெற்ற, புதிய புகா்ப் பேருந்துகளின் சேவை தொடக்க விழாவில் மேலும் அவா் பேசியதாவது:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்டம், மாதத்துக்கு 3.18 கோடி பயணிகளுக்கு சேவையாற்றுகிறது. இந்தக் கோட்டத்துக்குள்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா் மாவட்டங்களில் தமிழக அரசின் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணச் சேவை மூலம் தினந்தோறும் 7.5 லட்சம் பெண்கள் பயனடைகின்றனா். இதுவரை 80 கோடி போ் (பயணம்) இந்தத் திட்டத்தில் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

இதையடுத்து, தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் 67 புதிய புகா்ப் பேருந்துகளின் சேவையைத் தொடங்கிவைத்தாா். பிறகு, அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் போக்குவரத்துக் கழகத்தின் பொன்மேனி கிளை இடத்தில் அமைக்கப்பட்ட பெட்ரோல், டீசல், சிஎன்ஜி எரிபொருள் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். இதில் துணை மேயா் தி. நாகராஜன், அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட மேலாண் இயக்குநா் வே. சரவணன், பாரத் பெட்ரோலியம் நிறுவன அலுவலா் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com