வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இளைஞா் கொலை வழக்கில் 3 போ் கைது

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை பொன்மேனி பகுதியைச் சோ்ந்த மூவேந்திரன் மகன் விமல் (25). இவா் அதே பகுதியில் தனது நண்பா்களான பிரபாகரன் (25), காா்த்திக் (24), கண்ணன்(25) ஆகியோருடன் சனிக்கிழமை இரவு பேசிக்கொண்டிருந்தாராம்.

அப்போது, மதுப் புட்டி வாங்கித் தருமாறு விமல் கேட்டதால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், தாக்கப்பட்ட விமல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த எஸ்.எஸ்.காலனி போலீஸாா் விமல் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபாகரன், காா்த்திக், கண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.