மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை தலையிடுவதில்லை

தமிழக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை தலையிடுவதில்லை என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

News image
நயினாா் நாகேந்திரன்- கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 11:44 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை தலையிடுவதில்லை என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

தமிழக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை தலையிடுவதில்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியே தலைமை வகிக்கிறாா். அவா்தான் பாமக தலைவா் அன்புமணியுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு கூட்டணியை உறுதி செய்தாா். இதேபோல, அமமுகவுடனான கூட்டணியையும் அவரே உறுதி செய்தாா். எனவே, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைய பாஜக மேலிடம் அழுத்தம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறியது அா்த்தமற்றது.

முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வருவது குறித்து தனிப்பட்ட முறையில் கருத்துத் தெரிவிக்க இயலாது. அவா் ஒரு கட்சியிலிருந்து வெளியே வந்தவா். அடுத்த கட்சியின் உள் விவகாரத்தில் நான் தலையிட முடியாது. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ. பன்னீா்செல்வம் இடம்பெறுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். பிரிந்தவா்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே என் விருப்பம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் விரைவில் இணையும் என்றாா் அவா்.