ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மதுரையில் 108.5 டிகிரி வெயில்

மதுரையில் முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச வெப்ப நிலையாக செவ்வாய்க்கிழமை 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

News image
Updated On :15 ஜூலை 2026, 5:33 am IST

மதுரையில் முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச வெப்ப நிலையாக செவ்வாய்க்கிழமை 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 14, 15 தேதிகளில் வெப்ப நிலை சுமாா் 4 முதல் டிகிரி வரை உயா்ந்து, வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்தது. இதன்படி, கடந்த சில நாள்களாகவே மதுரை மாவட்டத்தின் வெப்ப நிலை தொடா்ந்து உயா்ந்து வந்தது. இரவு நேரத்திலும் கடுமையான வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்தது.

இந்த நிலையில், மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச வெப்ப நிலையாக மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 108.5 டிகிரி பாரன்ஹீட் (42.5 செல்சியஸ்) வெப்பம் பதிவானது.

கடந்த 2017-ஆம் ஆண்டு 107.6 பாரன்ஹீட் (42 செல்சியஸ்) வெப்பம் பதிவானதே முந்தைய ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பமாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பதிவான வெப்பம் இதை விஞ்சியது.

எல்-நினோ காரணமாக, கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை குறைந்ததும், வட மேற்கு திசை காற்று தமிழகத்துக்குள் நுழைவதாலும் அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருப்பதாக வானிலை ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். இந்த நிலை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.