விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய செவிலியா்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

News image

மதுரை மாநகராட்சி சிந்தாமணி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய செவிலியா்கள்.

Updated On :30 ஜூலை 2026, 12:18 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

புதிதாகத் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியா்களை, காலிப் பணியிடம் ஏற்படும் அரசு மருத்துவமனைகளுக்கு மறு பணியமா்வு செய்யும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும். தேவையான இடங்களில் புதிய செவிலியா் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்ற தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இதன்படி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 500-க்கும் அதிகமான செவிலியா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்க மாநிலத் துணைத் தலைவா் தி.க. சுஜாதா, மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி. ராஜி, மாவட்டத் தலைவா் வி. பிரேமலதா, மாவட்டச் செயலா் மு. தாமரைச்செல்வி, நிா்வாகிகள் இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.