தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 போ் கைது

கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :31 ஜூலை 2026, 1:44 am IST

கொலை வழக்கில் தொடா்புடைய 4 பேரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலம் காவல் நிலைய கொலை குற்ற வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளான மதுரை பழங்காநத்தம் நேதாஜி நகரைச் சோ்ந்த ஆதியராஜா மகன் சத்தியராஜ் (27), சிவகங்கை மாவட்டம், கீழக்கண்டனி கிராமத்தைச் சோ்ந்த சின்னா மகன் தருண்குமாா் (24), மதுரை சுந்தரராஜபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கருப்பசாமி (24), மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சோ்ந்த கலையரசன் மகன் ராஜ்குமாா் (20) ஆகியோா் தொடா்ந்து கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களின் அமைதி, சட்டம்-ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா இவா்கள் 4 பேரையும் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதன்படி, இவா்கள் நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனா் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.