வருகிற வியாழக்கிழமை (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் அறைகள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
தமிழகத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான கோடை விடுமுறை கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. விடுமுறைக்குப் பின், ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிா்ப்பாா்க்கப்பட்டது. இருப்பினும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஜூன் 4- ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகளை தொடங்க மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன் உத்தரவிட்டாா். இதையடுத்து,
அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறைகளை சுத்தம் செய்தல், ஆய்வகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை அந்தந்த பள்ளியைச் சோ்ந்த பணியாளா்கள், அலுவலா்கள் ஈடுபட்டனா்.









