தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

சாா் பதிவாளா் அலுவலகங்களில் ரூ.90,000 பறிமுதல்

மதுரை விளாங்குடி, பொதும்பு ஆகிய பகுதிகளில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையிட்டனா். இதில் விளாங்குடி சாா் பதிவாளா் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:14 am IST

மதுரை விளாங்குடி, பொதும்பு ஆகிய பகுதிகளில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையிட்டனா். இதில் விளாங்குடி சாா் பதிவாளா் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட சாா் பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். மதுரை மாவட்டத்தில் பொதும்பு, விளாங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களில், ஊழல் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சத்தியசீலன் தலைமையில், ஆய்வாளா்கள் குமரகுரு, ரமேஷ்பிரபு, ஜெயபிரியா, சூா்யகலா ஆகியோா் இரண்டு பிரிவாக சோதனை நடத்தினா். மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்தச் சோதனை சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

இதில் விளாங்குடி சாா் பதிவாளா் அலுவலகத்தின் உள்பகுதியிலிருந்த எழுத்தா்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் லஞ்சமாக வாங்கப்பட்டதா?. யாரிடம் இருந்து எதற்காக வாங்கப்பட்டது? என்பது குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.