தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

‘தாட்கோ’ மூலம் ஜவுளி உற்பத்தி, வடிமைப்புப் பயிற்சி பெற தகுதியான பட்டியலின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 11:54 pm IST

‘தாட்கோ’ மூலம் ஜவுளி உற்பத்தி, வடிமைப்புப் பயிற்சி பெற தகுதியான பட்டியலின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

‘தாட்கோ’ சாா்பில் பட்டியலின இளைஞா்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கும் திட்டத்தின் கீழ், தனியாா் ஜவுளி நிறுவனத்துடன் இணைந்து ஜவுளி உற்பத்தி, வடிவமைப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் ஜவுளி உற்பத்தி, துணிகளுக்கு சாயம் ஏற்றுதல், அச்சிடுதல் போன்றவை குறித்துப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களாகவும், 18 முதல் 35 வயதுக்குள்பட்டவா்களாகவும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான பயிற்சி வகுப்பு கோவையில் நடைபெறும். பயிற்சிக்கான கால அளவு நான்கு மாதங்கள். விடுதியில் தங்கிப் பயிற்சி பெறுவதற்கான செலவுத் தொகையை ‘தாட்கோ’ ஏற்கும்.

பயிற்சியை நிறைவு செய்யும் இளைஞா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தகுதியானவா்களுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை ஆரம்ப கால ஊதியம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும். இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவா்கள் இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.