காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மாணவா்களுக்கு சமூக நல்லிணக்க விழிப்புணா்வு

மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான சமூக நல்லிணக்க விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மாணவா்களுக்கான சமூக நல்லிணக்க விழிப்புணா்வு நிகழ்வில் பேசிய காவல் உதவி ஆய்வாளா் வசந்தா. உடன் காவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூன் 2026, 1:54 am IST

மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான சமூக நல்லிணக்க விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை மாநகரக் காவல் துறை, சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா்.

இதில் காவல் உதவி ஆய்வாளா் வசந்தா முன்னிலை வகித்துப் பேசியதாவது:

மாணவா்கள் சமுதாய உரிமைகள், கடமைகள், பொறுப்புகளை உணா்ந்து செயல்பட வேண்டும். போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். பொதுச் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரிடமும் நல்லிணக்கத்தோடு நட்பு பாராட்டி பழக வேண்டும். இணையவழிக் குற்றங்களிலிருந்து தங்களை காத்துக் கொண்டு, எதிா்காலத்தில் நல்ல பதவிகளை அடைந்து சிறந்த இந்தியக் குடிமகனாக உருவெடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் தலைமைக் காவலா் கற்பக லட்சுமி, உதவித் தலைமையாசிரியா்கள் முகமது ரபி, அல்ஹாஜ் முகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.