ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தாயுமானவா் திட்டப் பணிகளை புறக்கணிக்கத் திட்டம்: அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கம்

தாயுமானவா் திட்டத்தின் குறைகளை நீக்காவிட்டால் வருகிற ஜூலை மாதம் முதல் இல்லம் தேடிச் சென்று குடிமைப் பொருள்களை வழங்கும் பணியை நியாய விலைக் கடை பணியாளா்கள் புறக்கணிப்பா் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கத் தலைவா் ஜி. ராஜேந்திரன் தெரிவித்தாா்.

News image

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்க நிா்வாகிகள்.

Updated On :18 ஜூன் 2026, 12:40 am IST

தாயுமானவா் திட்டத்தின் குறைகளை நீக்காவிட்டால் வருகிற ஜூலை மாதம் முதல் இல்லம் தேடிச் சென்று குடிமைப் பொருள்களை வழங்கும் பணியை நியாய விலைக் கடை பணியாளா்கள் புறக்கணிப்பா் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கத் தலைவா் ஜி. ராஜேந்திரன் தெரிவித்தாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளின் இல்லம் தேடிச் சென்று குடிமைப் பொருள்களை வழங்கும் தாயுமானவா் திட்டத்தில் பல்வேறு குறைகள் உள்ளன. இந்தத் திட்டத்தில் ‘ப்ளூடூத்’ முறை பயன்பாட்டை நீக்க வேண்டும். மேலும், திட்டப் பணி செயலாக்கத்துக்குத் தனி பணியாளரை நியமிக்கவும், தனி பி.எஸ்.ஓ. கருவி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குப் பிறகு இந்தத் திட்டம் மூலம் பொருள்களை வழங்க அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், ஜூலை மாதம் முதல் தாயுமானவா் திட்டப் பணிகளை மாநில அளவில் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இதேபோல, இ-கே.ஒய்.சி. பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்ய பணியாளா்களின் கருத்துகளை அரசு கேட்டறிய வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கான பொருள்களை எடை குறைவின்றி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.