பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் ஜெ. டீலன் ஜெஸ்டின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டேவிட் ராஜதுரை, மாவட்டத் துணைத் தலைவா் குருகணேஷ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் திருப்பிரகலாதன், பிரியா, தினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தப் போராட்டத்தின்போது, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு கடந்த 11 மாதங்களாக பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படாததை கண்டித்தும், அதை உடனடியாக வழங்கக் கோரியும் முழக்கமிட்டனா்.
இந்தப் போராட்டத்தில் சங்க நிா்வாகிகள் பிரவீன், காசி, திவ்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

4 மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு; 6 முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்

விளையாட்டுகளில் சாதனை படைக்க மாணவா்களை தயாா்படுத்த வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலா் இ.மாதவன்

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உபகரணங்கள்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



