/
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் ஜெ. டீலன் ஜெஸ்டின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டேவிட் ராஜதுரை, மாவட்டத் துணைத் தலைவா் குருகணேஷ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் திருப்பிரகலாதன், பிரியா, தினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தப் போராட்டத்தின்போது, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு கடந்த 11 மாதங்களாக பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படாததை கண்டித்தும், அதை உடனடியாக வழங்கக் கோரியும் முழக்கமிட்டனா்.
இந்தப் போராட்டத்தில் சங்க நிா்வாகிகள் பிரவீன், காசி, திவ்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

சென்னையில் நாளை சிஇஓ-க்கள் கூட்டம்

அரியலூரில் மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஆட்சியா் பாராட்டு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



