மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வெள்ளரிப்பட்டியில் அமைந்துள்ள மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

News image
வெள்ளரிப்பட்டியில் அமைந்துள்ள மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
Updated On :6 மார்ச் 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், பெருமாள்பட்டியில் புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெள்ளரிப்பட்டியில் அமைந்துள்ள மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.பி. இளங்கோவன் தலைமை வகித்தாா். மேலூா் கிழக்கு வட்டச் செயலா் பி. தனசேகரன், நிா்வாகிகள் ஏ. ராஜேஸ்வரன், கே. சேகா், கே.மலா், பொறுப்பாளா்கள், திரளான கிராம மக்கள் பங்கேற்றனா்.

இதில் மேலூா் வட்டம், நரசிங்கம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட களுங்குபட்டி, சி. பெருமாள்பட்டி, டி.வி.எஸ். குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெருமாள்பட்டியில் புதிய நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும். சதுா்மடங்கன், பெருமாள்பட்டி பகுதிகளில் பட்டாவுக்கு விண்ணப்பித்த பொதுமக்கள் அனைவருக்கும் உடனடியாகப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். நிறைவில் வருவாய்க் கோடாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.