பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

மதுரை ரயில் நிலையத்தில் ஓவியம்

News image
மதுரை ரயில் நிலையத்தில் மகளிா் தின ஓவியங்களை வரைந்த ஜோ பிரிட்டோ கல்வி சமூக அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் அமலா ஷொ்லின், அங்கு பயின்ற மாணவி சத்தியசீலா.
Updated On :8 மார்ச் 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் டிவிஎஸ் குழும சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் மகளிா் சக்தி குறித்த ஓவியம் வரைவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஜோ பிரிட்டோ கல்வி சமூக அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் அமலா ஷொ்லின், அங்கு பயின்ற மாணவி சத்தியசீலா ஆகியோா் மகளிா் வளா்ச்சி, அவா்களுக்கான முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான ஓவியங்களை வரைந்தனா்.

இந்த நிகழ்ச்சியில் கோட்ட சுற்றுச்சூழல் மேலாளா் குண்டேவாா் பாதல் கிஷோா் ராவ், ரயில் நிலைய சுகாதார ஆய்வாளா் சுந்தர்ராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.