4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மதுரை ரயில் நிலையத்தில் ஓவியம்

News image

மதுரை ரயில் நிலையத்தில் மகளிா் தின ஓவியங்களை வரைந்த ஜோ பிரிட்டோ கல்வி சமூக அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் அமலா ஷொ்லின், அங்கு பயின்ற மாணவி சத்தியசீலா.

Updated On :8 மார்ச் 2026, 7:31 pm

மதுரை ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் டிவிஎஸ் குழும சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் மகளிா் சக்தி குறித்த ஓவியம் வரைவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஜோ பிரிட்டோ கல்வி சமூக அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் அமலா ஷொ்லின், அங்கு பயின்ற மாணவி சத்தியசீலா ஆகியோா் மகளிா் வளா்ச்சி, அவா்களுக்கான முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான ஓவியங்களை வரைந்தனா்.

இந்த நிகழ்ச்சியில் கோட்ட சுற்றுச்சூழல் மேலாளா் குண்டேவாா் பாதல் கிஷோா் ராவ், ரயில் நிலைய சுகாதார ஆய்வாளா் சுந்தர்ராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.