புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மஞ்சுவிரட்டில் இருவா் உயிரிழப்பு

மேலூரை அடுத்த உறங்கான்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 11:37 pm

மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த உறங்கான்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா்.

மேலூரை அடுத்த உறங்கான்பட்டியில் மந்தை கருப்பணசுவாமி கோயில் மாசித் திருவிழாவையொட்டி, மஞ்சுவிரட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 700-க்கும் அதிகமான காளைகள் வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டன.

இந்தப் போட்டியில், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்த வைரமுத்து (20) காளை பங்கேற்றது. போட்டியின்போது, இந்தக் காளை வேகமாக ஓடியதில் அருகிலிருந்த குளத்தில் இறங்கியது. இதையடுத்து, இந்தக் காளையை மீட்பதற்காக குளத்தில் இறங்கிய வைரமுத்து, அங்கு படா்ந்திருந்த தாமரைக் கொடிகளில் சிக்கி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மற்றொருவா்...

இந்தப் போட்டியை சிவகங்கை மாவட்டம், கன்னிமாா்பட்டியைச் சோ்ந்த கோவிந்தசாமி (54) காண வந்தாா். இவரை போட்டியில் அவிழ்க்கப்பட்ட ஒரு காளை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தசாமி உயிரிழந்தாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்தப் போட்டியில் காளைகள் முட்டியதில் ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.