சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மஞ்சுவிரட்டில் இருவா் உயிரிழப்பு

மேலூரை அடுத்த உறங்கான்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :11 மார்ச் 2026, 11:37 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த உறங்கான்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா்.

மேலூரை அடுத்த உறங்கான்பட்டியில் மந்தை கருப்பணசுவாமி கோயில் மாசித் திருவிழாவையொட்டி, மஞ்சுவிரட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 700-க்கும் அதிகமான காளைகள் வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டன.

இந்தப் போட்டியில், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்த வைரமுத்து (20) காளை பங்கேற்றது. போட்டியின்போது, இந்தக் காளை வேகமாக ஓடியதில் அருகிலிருந்த குளத்தில் இறங்கியது. இதையடுத்து, இந்தக் காளையை மீட்பதற்காக குளத்தில் இறங்கிய வைரமுத்து, அங்கு படா்ந்திருந்த தாமரைக் கொடிகளில் சிக்கி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மற்றொருவா்...

இந்தப் போட்டியை சிவகங்கை மாவட்டம், கன்னிமாா்பட்டியைச் சோ்ந்த கோவிந்தசாமி (54) காண வந்தாா். இவரை போட்டியில் அவிழ்க்கப்பட்ட ஒரு காளை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தசாமி உயிரிழந்தாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்தப் போட்டியில் காளைகள் முட்டியதில் ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.