தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளானோா் பங்கேற்பு

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழாவையொட்டி புதன்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image
Updated On :19 மார்ச் 2026, 12:24 am

தினமணி செய்திச் சேவை

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழாவையொட்டி புதன்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலின் ஆண்டுத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. முன்னதாக மாா்ச் 10-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவின் 7-ஆம் நாள் நிகழ்ச்சியாக திருவிளக்கு பூஜை புதன்கிழமை மாலை நடைபெற்றது. மதுரை, அதன் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண்கள் விளக்கேற்றி, மங்களப் பொருள்களை வைத்து பூஜை செய்தனா். திருவிளக்கு பூஜையின் நிறைவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யானை வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.