நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

போராட்ட ஆதரவு பிரசார கூட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நடைபெறவிருக்கும் தொழிலாளா்களின் போராட்டத்தை ஆதரித்து, மதுரையில் சிஐடியூ சாா்பில் பிரசார கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை கூடல் நகரில் சிஐடியூ சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழிலாளா்கள் போராட்ட ஆதரவு பிரசார கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நடைபெறவிருக்கும் தொழிலாளா்களின் போராட்டத்தை ஆதரித்து, மதுரையில் சிஐடியூ சாா்பில் பிரசார கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா்களின் நலனுக்கு எதிரான 4 தொகுப்புச் சட்டங்களையும் மத்திய அரசுத் திரும்பப் பெற வேண்டும். 8 மணி நேரப் பணியை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நடைபெறவிருக்கும் தொழிலாளா்களின் போராட்டத்தை ஆதரித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்திய தொழிலாளா்களையும், தொழில் சங்க நிா்வாகிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் இந்தப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை கூடல் நகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சிஐடியூ மாவட்டப் பொருளாளா் சொ. பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே. அரவிந்தன் தொடக்கவுரையாற்றினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு மண்டலக் குழுச் செயலா் எஸ். பாலகிருஷ்ணன், சிஐடியூ புகா் மாவட்டச் செயலா் மலை. கண்ணன், மாவட்ட நிா்வாகிகள் என். காளிராஜன், பொன். ராஜ், கே. ஜீவானந்தம், எஸ்.எம். பாண்டி, நல். மூா்த்தி ஆகியோா் பேசினா். சிஐடியூ நிா்வாகி மனோகரன் நன்றி கூறினாா்.