கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நடைபெறவிருக்கும் தொழிலாளா்களின் போராட்டத்தை ஆதரித்து, மதுரையில் சிஐடியூ சாா்பில் பிரசார கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொழிலாளா்களின் நலனுக்கு எதிரான 4 தொகுப்புச் சட்டங்களையும் மத்திய அரசுத் திரும்பப் பெற வேண்டும். 8 மணி நேரப் பணியை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நடைபெறவிருக்கும் தொழிலாளா்களின் போராட்டத்தை ஆதரித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்திய தொழிலாளா்களையும், தொழில் சங்க நிா்வாகிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் இந்தப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை கூடல் நகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சிஐடியூ மாவட்டப் பொருளாளா் சொ. பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே. அரவிந்தன் தொடக்கவுரையாற்றினாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு மண்டலக் குழுச் செயலா் எஸ். பாலகிருஷ்ணன், சிஐடியூ புகா் மாவட்டச் செயலா் மலை. கண்ணன், மாவட்ட நிா்வாகிகள் என். காளிராஜன், பொன். ராஜ், கே. ஜீவானந்தம், எஸ்.எம். பாண்டி, நல். மூா்த்தி ஆகியோா் பேசினா். சிஐடியூ நிா்வாகி மனோகரன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: தில்லியில் 6 விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் அறிமுகம்

நெல்லையில் தொழிற்சங்கத்தினா் பேரணி

பிரசார கூட்டம், சுவா் விளம்பரங்களை அனுமதி பெற்றே செய்ய வேண்டும்: தோ்தல் அலுவலா்

பிரசார நடவடிக்கைகள்: நேரத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்: தலைமைத் தோ்தல் அதிகாரி
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

