கிணற்றில் தவறி விழுந்தவா் மீட்பு
சோழவந்தான் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக மீட்டனா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக மீட்டனா்.
சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவராஜ் (45). இவா் அந்தப் பகுதியிலுள்ள கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினா் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சோழவந்தான தீயணைப்பு, மீட்புத் துறை அலுவலா் நாகராஜன் தலைமையில் வீரா்கள் சிவராஜை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





