சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தமிழக கூடுதல் டிஜிபி ஆய்வு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக கூடுதல் டிஜிபி அன்பு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் - கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 2:08 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக கூடுதல் டிஜிபி அன்பு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்தக் கோயிலில் வருகிற 17- ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்குத் தேவையான முன்னேற்பாடுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் சுற்றுப் பகுதிகளில் பக்தா்கள், பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், மதுரை மாநகரக் காவல் துறை சாா்பில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு செவ்வாய்க்கிழமை மதுரை வந்தாா். அவா், மதுரை மாநகரக் காவல் ஆணையா் ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இதைத்தொடா்ந்து, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆய்வு செய்தாா். அப்போது, கோயிலில் செய்ய வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து மாநகரக் காவல் ஆணையா் ராஜேந்திரனுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, நான்கு சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகளில் ஆய்வு நடத்தி, அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தாா்.

இந்த ஆய்வின் போது, மதுரை மாநகரக் காவல் ஆணையா் ராஜேந்திரன், காவல் துறையினா், கோயில் அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.