குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

சாலை விபத்து, குற்றங்களை தெரிவிக்க செல்லிடப்பேசி எண் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்து மற்றும் குற்றங்களை தெரிவிக்க பொதுத் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :13 பிப்ரவரி 2019, 8:27 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்து மற்றும் குற்றங்களை தெரிவிக்க பொதுத் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் சரக துணைத் தலைவர் என்.காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நிகழும் போக்குவரத்து குற்றங்கள், சாலை விபத்துகள் தொடர்பான புகார்களை 9498181457 என்ற எண்ணில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த எண் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் செல்லும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலையத்துக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கப்படும். இதனால் காவல் துறையினர் மூலம் விபத்துகள் தொடர்பான பிரச்னைகள் நிவர்த்தி செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.