நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

திருப்புல்லாணி கோயிலில்  திருக்குருங்குடி ஜீயர் தரிசனம்

திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்குருங்குடி ஜீயர் தரிசனம் செய்தார்.

Updated On :13 பிப்ரவரி 2019, 8:33 am IST

திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்குருங்குடி ஜீயர் தரிசனம் செய்தார்.
 ரத சப்தமியை முன்னிட்டு இக்கோயிலுக்கு வந்த ஜீயரை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், கோயில் செயல் அலுவலர் ராமு, கோயில் பேஷ்கர் கண்ணன் உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அங்கு 
ஆதி ஜெகநாதப் பெருமாள், பத்மாசனித்தாயார், ஆண்டாள், தர்ப்பசயனராமர், பட்டாபிஷேக ராமர் ஆகிய சன்னதிகளில் அவர் தரிசனம் செய்து மங்களா சாசனம் செய்தார்.
பின்னர் ஆண்டவன் ஆசிரம தேசிகன் சன்னதியில் ஜீயர் மங்களா சாசனம் செய்தார்.
அப்போது கோயிலில் இருந்து சுவாமி தேவிபிராட்டியருடன் ஜீயர் மடத்தில் எழுந்தருளிய திருமஞ்சனம் நடைபெற்றது.இந்தநிகழ்ச்சியில் ஜே.எஸ்.வாசன் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாலையில் பல்லக்கில் சுவாமி, பிராட்டியருடன் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.