தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

என்.கரிசல்குளம் சாலை சீரமைப்பு பணிகள் தாமதம்:  பொதுமக்கள் அவதி

கமுதி அருகே சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், 5 கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:26 am IST

கமுதி அருகே சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், 5 கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
   கமுதி அருகே சின்னக்கரிசல்குளத்திலிருந்து என்.கரிசல்குளம், தோப்புநத்தம் வழியாக கீழமுடி மன்னார் கோட்டைக்கு செல்லும் 8 கி.மீ தூரம் தார்ச்சாலையினை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் சாலையின் குறுக்கே 2 சிறு பாலங்கள், தடுப்புச் சுவர் அமைக்கும்பணி கடந்த 8 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இருந்த போதிலும் சாலை அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது. 
  இதனால் கீழமுடி மன்னார் கோட்டையில் இருந்து கமுதிக்கு  12 கி.மீ. தூரம் சுற்றி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  சாலை சீரமைப்புப் பணிகள் தொய்வாக நடப்பதால் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் 5 கிராம விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 
  எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு என்.கரிசல்குளம் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.