நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

என்.கரிசல்குளம் சாலை சீரமைப்பு பணிகள் தாமதம்:  பொதுமக்கள் அவதி

கமுதி அருகே சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், 5 கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:26 am IST

கமுதி அருகே சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், 5 கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
   கமுதி அருகே சின்னக்கரிசல்குளத்திலிருந்து என்.கரிசல்குளம், தோப்புநத்தம் வழியாக கீழமுடி மன்னார் கோட்டைக்கு செல்லும் 8 கி.மீ தூரம் தார்ச்சாலையினை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் சாலையின் குறுக்கே 2 சிறு பாலங்கள், தடுப்புச் சுவர் அமைக்கும்பணி கடந்த 8 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இருந்த போதிலும் சாலை அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருகிறது. 
  இதனால் கீழமுடி மன்னார் கோட்டையில் இருந்து கமுதிக்கு  12 கி.மீ. தூரம் சுற்றி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  சாலை சீரமைப்புப் பணிகள் தொய்வாக நடப்பதால் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் 5 கிராம விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 
  எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு என்.கரிசல்குளம் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.