இலங்கையில் உள்ள 16 விசைப்படகுகளை மீட்க மூன்றாம் கட்டமாக ராமேசுவரத்தில் இருந்து 14 விசைப்படகுகளில் 79 மீனவர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு புதன்கிழமை சென்றனர்.
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையினரால் விசைப்படகுகளுடன் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இதில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அவர்களது விசைப்படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து வந்தது. இந்நிலையில், இலங்கை அரசின் பரிந்துரையின் பேரிலும் நல்லெண்ண அடிப்படையிலும் தமிழக மீனவர்களின் 46 விசைப்படகுகளை இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இந்த படகுகளை மீட்டு வர இந்திய மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க நிர்வாகிகள் இலங்கை சென்றனர். இதனையடுத்து, இரண்டு கட்டங்களாக இலங்கை சென்ற மீட்பு குழுவினர் 14 விசைப்படகுகளை மீட்டு வந்தனர். இந்நிலையில், மூன்றாம் கட்டமாக ராமேசுவரத்தை சேர்ந்த 10 விசைப்படகுகள், நாகை மாவட்டத்தை சேர்ந்த 6 விசைப்படகுகள் என 16 விசைப்படகுகளை மீட்க ராமேசுவரம் மற்றும் மண்டபத்தில் இருந்து 14 விசைப்படகுகளில் 79 மீனவர்கள் புதன்கிழமை இலங்கை புறப்பட்டுச் சென்றனர். இந்த மீனவர்கள் குழு இரண்டு நாள்கள் அங்கு தங்கி விசைப்படகுகளை சீரமைத்து பின்னர் நாடு திரும்ப உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 180 கனஅடி

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பா்கூா் அருகே காா் கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு
ஊராட்சி செயலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் திமுக பிரமுகா் கைது
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
