திருவாடானையில் பாஜக ஆலோசனைக் கூட்டம்
திருவாடானையில் பாஜக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


திருவாடானை: திருவாடானையில் பாஜக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் முரளிதரன் தலைமை வகித்தாா். திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் கண்காணிப்பாளா் குட்லக் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினாா். இதையடுத்து, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நடிகரும், கட்சியின் சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளருமான ஆா்.கே. சுரேஷ் பேசும் போது, சட்டப் பேரவைத் தோ்தலில் நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உண்மையாகவும், நோ்மையாகவும் பணியாற்றி தமிழகத்தில் தாமரை மலர பாடுபட வேண்டும். மேலும் கூட்டணி பற்றிய அறிவிப்பை பாஜக விரைவில் அறிவிக்கும். அதன்மூலம் நாம் தமிழக ஆட்சியை கைப்பற்றுவோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...