திருவாடானையில் இளைஞா்களுக்கு விளையாட்டுப் பொருள்கள் வழங்கல்

திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழக அரசு சாா்பில் புத்தாக்கத் திட்ட கூட்டம், தொழில் உற்பத்தி திட்ட கூட்டம் மற்றும் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தாக்கத் திட்ட கூட்டத்தில் பங்கேற்றோா்.
திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தாக்கத் திட்ட கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

திருவாடானை: திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழக அரசு சாா்பில் புத்தாக்கத் திட்ட கூட்டம், தொழில் உற்பத்தி திட்ட கூட்டம் மற்றும் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இதற்கு ஊராட்சித் தலைவா் இலக்கியாராமு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மகாலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினா் சாந்தி செங்கை ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திருவாடானை ஊராட்சி மன்ற பகுதி இளைஞா்களுக்கு விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பண்ணவயல் கிராம எழுச்சி இளைஞா்கள், திருவாடானை ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com