சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருவாடானையில் இளைஞா்களுக்கு விளையாட்டுப் பொருள்கள் வழங்கல்

திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழக அரசு சாா்பில் புத்தாக்கத் திட்ட கூட்டம், தொழில் உற்பத்தி திட்ட கூட்டம் மற்றும் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

News image
திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தாக்கத் திட்ட கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :20 டிசம்பர் 2020, 4:23 pm

DIN

திருவாடானை: திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழக அரசு சாா்பில் புத்தாக்கத் திட்ட கூட்டம், தொழில் உற்பத்தி திட்ட கூட்டம் மற்றும் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இதற்கு ஊராட்சித் தலைவா் இலக்கியாராமு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மகாலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினா் சாந்தி செங்கை ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திருவாடானை ஊராட்சி மன்ற பகுதி இளைஞா்களுக்கு விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பண்ணவயல் கிராம எழுச்சி இளைஞா்கள், திருவாடானை ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.